சென்னை,ஏப்.4 ரூ.6300 கோடி மதிப்புள்ள பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஆர்பிஎஸ்ஏ ஆலோசகர்களை நியமித்தது. மத்திய அரசின் பொதுத்துறை பொது சொத்து நிர்வகிக்கும் நிறுவனமான ((DIPAM )வடகிழக்கு மின்சார கம்பெனி (NEEPCO) மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனங்களின் (KPL) பங்குகளை விற்க சர்வதேச அளவிலான பங்குகளை விற்கவும் சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆர்பிஎஸ்ஏ என்ற ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
கொரானா வைரஸ் பாதிப்பால் நாடே ஊரடங்கில் முடங்கிக்கிடக்கும் வேளையில் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. மத்திய அரசுக்கு NEEPCO வில் உள்ள 100 சதவீத பங்குகள் மதிப்பு 4 ஆயிரம் கோடி ஆகும். காமராஜர் துறைமுகத்தில் 66.67 சதவீத பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 2383 கோடி ஆகும். ஆர்பிஎஸ்ஏ நிறுவனத்தின் ஆலோசகர்கள் இந்த இரண்டு நிறுவனத்தின் விற்பனைகளையும் வெற்றிகரமாக முடித்துக்கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். பொதுத்துறை பொது சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்திற்காக (DIPAM) ஆர்பிஎஸ்ஏ என்ற இந்த நிறுவனம் உடன் இருந்து இரண்டு நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு ஏற்பாடு செய்யும்.
இந்த இரண்டு நிறுவன விற்பனை ஏற்பாடுகளும் இந்தியாவே முடங்கிக்கிடக்கும் நிலையிலும் விற்பதற்கு எந்த தடை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் நிலையில் மத்திய அரசு முனைப்புடன் விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேசிய அனல் மின்கழகம் (NTPC) நிறுவனத்தை கையகப்படுத்திக் கொள்ளப்போகிறது. சென்னை துறைமுகம். உடனடியாக காமராஜர் துறைமுகத்தை பெற்று பயனடையப்போகிறது என்று ஆர்பிஎஸ்ஏ ஆலொசகர் அஜய் மாலிக் கூறுயுள்ளார்.
NEEPCO சொத்து விபரங்கள் :
பங்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசிற்கும் தேசிய அனல் மின் கழகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. மத்திய அரசானது NEEPCO விற்கு சொந்தமான 100 சதவீத பங்குகளை தேசிய அனல் மின் கழகத்திற்கு மடை மாற்றம் செய்கிறது. NEEPCO வில் இந்திய குடியரசுத்தலைவருக்கு சொந்தமான 360,98,10,400 சொந்தப்பங்குகளை மத்திய எரிசக்தி துறை அமைச்சகத்தின் மூலம் (NTPC க்கு மாற்றம் செய்யப்படும். இந்த நிறுவனத்தை தேசிய அனல் மின் கழகம் ரூ.4 ஆயிரம் கோடி கொடுத்து வாங்குகின்றது. இதன் மதிப்பு 12 ஆயிரம் கோடி ஆகும். NEEPCO நிறுவனம் துவக்கத்தில் 7 நீர் மின்நிலையங்களை மட்டும் வைத்திருந்தது. 1457 மெகாவாட் திறனுள்ள அனல் மின்நிலையங்களுடன் சூரிய சக்தி மின்நிலையங்களையும் வடகிழக்கு மாநிலங்களில் வைத்துள்ளது.ஒரு 600 மெகாவாட் திறனுள்ள நீர் மின்நிலையத்தை கட்டுமானம் செய்து வருகின்றது. இது 2021 ஆண்டில் உற்பத்திக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் :
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 66.67 சதவீத மத்திய அரசிற்கு சொந்தமான பங்குகளை விற்பதற்கான ஒப்பந்தத்தை காமராஜர் துறைமுகத்தின் 33.33 சதவீத பங்குகளை கொண்டுள்ள சென்னை துறைமுகத்திடம் விற்க அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த பங்கு மாறுதலில் இந்தியக குடியரசுத்தலைவருக்கு சொந்தமான 20,00,00,000 பங்குகளை கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் மூலம் விற்பதற்கு ஏற்பாடு ஆகியுள்ளது. சென்னை துறைமுகம் ரூ.2383 கோடி பணம் கொடுத்து ரூ.3575 கோடி மதிப்புள்ள காமராஜர் துறைமுக பங்குகளை வாங்குவதற்கு சென்னை துறைமுகம் தயாராகிவிட்டது.
காமராஜர் துறைமுகம் ஒரு மாதிரி லேண்ட் லார்டு துறைமுகம் ஆகும்.தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை கொண்டு வரும் கண்டெய்னர் திரவ எரிவாயு மற்றும் திரவப்பொருள்களைக் கையாளும் துறைமுகமாக உள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் 340 லட்சம் டன் எடையுள்ள பொருட்களை கையாண்டுள்ளது. சிறப்பான உள்கட்டமைப்பு வசதி கொண்டது. திரவ எரிவாயு முனையம். திரவங்களைக் கையாளும் கப்பல் வருவதற்கும் நிலக்கரி மற்றும் கண்டெய்னர் கையாளும் துறைமுகமாக உள்ளது.
ஆர்பிஎஸ்ஏ நிறுவனம் 1971 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் 8 அலுவலகங்களும் 250 அலுவலர்கள் உள்ளனர். துபாய் மற்றும் சிங்கப்பூர் உட்பட பல இடங்களில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனமானது நிறுவனங்களின் மதிப்பீடு செய்வது , முதலீடு மற்றும் வங்கிப்பணி மறுசீரமைப்பு ணிகள் உட்பட நிறுவனங்களை விற்பதற்கான ஏற்பாடு செய்யும் உலக அளவிலான அமைப்பாகும்.